விபத்தில் கட்டிட தொழிலாளி பலி


விபத்தில் கட்டிட தொழிலாளி பலி
x
தினத்தந்தி 2 Aug 2021 6:04 PM GMT (Updated: 2 Aug 2021 6:04 PM GMT)

விபத்தில் கட்டிட தொழிலாளி பலி

ராமநாதபுரம்
திருப்புல்லாணி அருகே உள்ள சின்ன பாளையரேந்தல் பகுதியை சேர்ந்தவர் முத்துமணி(வயது 49). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் ஊரடங்கு காரணமாக ஊருக்கு திரும்பிய நிலையில் இங்கு கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் மோட்டார் சைக்கிளில் ராமநாதபுரத்தில் இருந்து ஊருக்கு சென்றிருந்த போது திருப்புல்லாணி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார். அவரை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story