விஷம் குடித்து வாலிபர் சாவு


விஷம் குடித்து வாலிபர் சாவு
x
தினத்தந்தி 5 Aug 2021 5:03 PM GMT (Updated: 5 Aug 2021 5:03 PM GMT)

தேனி மாவட்டம் கூடலூர் அருகே மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி : 


தேனி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள லோயர்கேம்ப் ராக்காச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துச்செல்வம் (வயது 28). இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு திருமணமாகி   6 மாதமாகிறது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இதன் காரணமாக வனிதா கோபித்துக்கொண்டு கூடலூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் முத்துச்செல்வம் மனமுடைந்து காணப்பட்டார்.  

இந்நிலையில் நேற்று காலை முத்துச்செல்வம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த அவருடைய தாயிடம், விஷம் குடித்ததாக முத்துச்செல்வம் கூறினார். 

உடனே அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முத்துச்செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் முத்துச்செல்வம் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். 

இதுகுறித்து லோயர்கேம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவருைடய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். கம்பம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறையில் முத்துச்செல்வம் உடல் வைக்கப்பட்டது. அங்கு சென்று பார்த்த உறவினர்கள் சிலர், அவருடைய உடலில் அசைவு ஏற்பட்டதாக கூறினர். 

இதையடுத்து டாக்டர்கள் அங்கு சென்று பரிசோதித்து, அவர் இறந்ததை உறவினர்கள் முன்னிலையில் உறுதிப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story