பஞ்சவடீ கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை


பஞ்சவடீ கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை
x
தினத்தந்தி 6 Aug 2021 7:11 PM GMT (Updated: 6 Aug 2021 7:11 PM GMT)

பஞ்சவடீ கோவிலில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வானூர், ஆக.7-
பஞ்சவடீ கோவிலில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி- திண்டிவனம் சாலையில் பஞ்சவடீயில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொரோனா பரவலை தடுக்க வருகிற 23-ந்தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோவிலில் நடை அடைக்கப்படுகிறது. 
எனவே அந்த நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரவேண்டாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story