சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது


சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 Aug 2021 5:40 PM GMT (Updated: 8 Aug 2021 5:40 PM GMT)

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கரூர்
கரூர் மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள கே.பி காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ராஜேந்திரன் (வயது 19). இவருக்கும், 16 வயது சிறுமிக்கும் ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாந்தோணி சமூக நல அலுவலர் சரஸ்வதி கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்து சிறுமியை திருமணம் செய்த ராஜேந்திரனை கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்ததாக ராஜேந்திரனின் தந்தை கோவிந்தராஜ், தாயார் வள்ளி மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story