அரும்பாவூர் பகுதியில் நாளை மின் தடை


அரும்பாவூர் பகுதியில் நாளை மின் தடை
x
தினத்தந்தி 9 Aug 2021 8:43 PM GMT (Updated: 9 Aug 2021 8:43 PM GMT)

அரும்பாவூர் பகுதியில் நாளை மின் தடை செய்யப்படுகிறது.

வேப்பந்தட்டை:
வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் சங்கீதா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-
அ.மேட்டூர் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்று, பூமிதானம், கோரையாறு, கவுண்டர்பாளையம், அ.மேட்டூர், விஜயபுரம், அரும்பாவூர், பெரியசாமிகோவில், அரசடிகாடு, மேலக்குணங்குடி, வேப்படி, பாலக்காடு, சீனிவாசபுரம், பூலாம்பாடி, கள்ளப்பட்டி, கடம்பூர் ஆகிய ஊர்களில் மின்சார வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story