மதுபாட்டில்கள் விற்றவர் கைது


மதுபாட்டில்கள் விற்றவர் கைது
x
தினத்தந்தி 10 Aug 2021 7:59 PM GMT (Updated: 10 Aug 2021 7:59 PM GMT)

நெல்லையில் மதுபாட்டில்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை மாநகர மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையில் போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது பாளையங்கோட்டை பஸ்நிலையம் அருகே, வேனில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக, பாளையங்கோட்டை கக்கன்நகரை சேர்ந்த முருகபாரதி (வயது 56) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 73 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.8 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story