நாமக்கல்லில் லாரி டிரைவரிடம் ரூ.25 ஆயிரம் வழிப்பறி திருநங்கைகள் 3 பேர் கைது


நாமக்கல்லில் லாரி டிரைவரிடம் ரூ.25 ஆயிரம் வழிப்பறி திருநங்கைகள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 Aug 2021 5:43 PM GMT (Updated: 22 Aug 2021 5:45 PM GMT)

நாமக்கல்லில் லாரி டிரைவரிடம் ரூ.25 ஆயிரம் வழிப்பறி திருநங்கைகள் 3 பேர் கைது.

நாமக்கல்,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 40). லாரி டிரைவர். இவர் நேற்று லாரியை பழுது நீக்கம் செய்வதற்காக பட்டறையில் விடுவதற்கு நாமக்கல் வந்தார்.

நாமக்கல் பஸ் நிலையம் வந்து இறங்கிய அவரிடம் திருநங்கை ரசிகா (26) பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் அவர் ஆசை வார்த்தை கூறி கணபதியை போதுப்பட்டி பகுதிக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது‌. அங்கிருந்த திருநங்கைகள் திவ்யா (25), பிரபா (30) என 3 பேரும் சேர்ந்து லாரி டிரைவர் கணபதியை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.25 ஆயிரத்தை வழிப்பறி செய்தனர்.
இதுகுறித்து கணபதி நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநங்கைகள் ரசிகா, திவ்யா, பிரபா ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story