கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை


கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 26 Aug 2021 7:08 PM GMT (Updated: 26 Aug 2021 7:08 PM GMT)

தோகைமலை அருகே திருமணம் செய்ய பெற்றோர் வற்புறுத்தியதால் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தோகைமலை,
திருமணம் செய்ய மறுப்பு
தோகைமலை அருகே உள்ள மணியகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 39). இவருடைய மகள் பானுப்பிரியா (19). இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் திருமணம் செய்ய பானுப்பிரியா மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பானுப்பிரியா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பழனிச்சாமி தனது மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
கிணற்றில் குதித்து தற்கொலை
இந்தநிலையில் வீட்டின் கினற்றின் அருகே பானுப்பிரியா அணிந்திருந்த செருப்பு இருந்ததால் சந்தேகமடைந்த பழனிச்சாமி தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில், திருமணம் செய்ய பெற்றோர் வற்புறுத்தியதால் பானுப்பிரியா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 
பிரேத பரிசோதனை
இதனைதொடர்ந்து முசிறி தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் குதித்து பானுப்பிரியாவின் உடலை மீட்டனர். அவரது உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். அதன் பின்னர் பானுப்பிரியாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story