நல்லதங்காள் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


நல்லதங்காள் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 27 Aug 2021 8:35 PM GMT (Updated: 27 Aug 2021 8:35 PM GMT)

நல்லதங்காள் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பில்லங்குளம் கிராமத்தில் செல்வ விநாயகர், நல்லதங்காள் அம்மன், மதுரை வீரன் சுவாமி, நாக கன்னிமார் எழுந்தருளியுள்ள கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றது. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா, கடந்த 10 நாட்களுக்கு முன்பு முலைப்பாலிகை போடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, அங்குராப்பணம், கும்ப அலங்காரம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பில்லங்குளம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story