நெல்லை சரக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி


நெல்லை சரக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி
x
தினத்தந்தி 28 Aug 2021 5:38 PM GMT (Updated: 28 Aug 2021 5:38 PM GMT)

தூத்துக்குடி வல்லநாட்டில் நெல்லை சரக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி வல்லநாட்டில் நெல்லை சரக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நேற்று நடந்தது.

துப்பாக்கி சுடும் போட்டி

நெல்லை சரக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் நேற்று நடந்தது. போட்டிக்கு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கமாண்டோ படை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டியில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், சூப்பிரண்டுகள் (தூத்துக்குடி) ஜெயக்குமார், (நெல்லை)மணிவண்ணன், (தென்காசி) கிருஷ்ணராஜ், (கன்னியாகுமரி) பத்ரிநாராயணன், நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சுரேஷ்குமார், நெல்லை மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் சுரேஷ்குமார், பேரூரணி காவலர் பயிற்சிப்பள்ளி சூப்பிரண்டு ராஜராஜன், மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படை பட்டாலியன் சூப்பிரண்டுகள் ஏசுசந்திரபோஸ், கார்த்திகேயன், உதவி சூப்பிரண்டுகள் (திருச்செந்தூர்) ஹர்ஷ்சிங், (வள்ளியூர்) சமய்சிங் மீனா ஆகியோர் கலந்துகொண்டனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

இன்சாஸ் ரக துப்பாக்கி சுடும் பிரிவுக்கான போட்டியில் வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா முதலிடத்தையும், தூத்துக்குடி மாவட்ட சூப்பிரண்டு ஜெயக்குமார், நெல்லை மாவட்ட சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் 2-வது இடத்தையும், பேரூரணி காவலர் பயிற்சிப்பள்ளி போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும்போட்டியில் தென்காசி மாவட்ட சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் முதலிடத்தையும், திருச்செந்தூர் உதவி சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் 2-வது இடத்தையும், நெல்லை மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் சுரேஷ்குமார் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
ஒட்டுமொத்த துப்பாக்கி சுடும் போட்டியில் தென்காசி போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் முதலிடத்தையும், திருச்செந்தூர் உதவி சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் 2-வது இடத்தையும், வள்ளியூர் உதவி சூப்பிரண்டு சமய்சிங் மீனா 3-வது இடத்தையும் பிடித்தனர்.
போட்டியின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு நெல்லை மாநகர கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் பரிசு வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்கள் தடுப்பு குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி தலைமையில் தூத்துக்குடி ஆயுதப்படை துணை சூப்பிரண்டு கண்ணபிரான், இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் உள்ளிட்ட போலீசார் செய்திருந்தனர்.

Next Story