கத்தியை காட்டி மிரட்டல்


கத்தியை காட்டி மிரட்டல்
x
தினத்தந்தி 29 Aug 2021 7:15 PM GMT (Updated: 29 Aug 2021 7:15 PM GMT)

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர், 
விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே ஓட்டல் நடத்தி வருபவர் முகமது சம்சுதீன் (வயது 35). இவரது ஓட்டலுக்கு சாப்பிட வந்த வாலிபர் ஒருவர் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் சென்றார். சம்சுதீன் பணத்தை கேட்டபோது அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்களின் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து இந்நகர் மேற்கு போலீசில் சம்சுதீன் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்த அப்துல் பதாக் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைதான அப்துல் பதாக் மீது பல வழக்குகள் இருப்பது தெரியவந்தது. 
கத்தியை காட்டி மிரட்டல் 

Next Story