நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 62 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி


நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 62 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி
x
தினத்தந்தி 3 Sep 2021 6:06 PM GMT (Updated: 3 Sep 2021 6:06 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 62 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

நாமக்கல்:
62 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 48 ஆயிரத்து 942 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே 16 பேரின் பெயர்கள் பிற மாவட்ட பட்டியலில் இருந்து நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 958 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 62 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49 ஆயிரத்து 20 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் நாமக்கல் மாவட்டத்தில் 53 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.
ஒருவர் பலி
இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 472 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நல்லிபாளையத்தை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 473 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் இதுவரை 48 ஆயிரத்து 14 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அதேபோல் 533 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story