மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வாலிபர் பலி
வேலாயுதம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
நொய்யல்,
கார் மோதல்
கரூர் நடையனூர் அருகே இளங்கோ நகரை சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன். இவரது மகன் ரகு (வயது 29). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் வேலாயுதம்பாளையம் தேசியநெடுஞ்சாலை அருகே எலக்ட்ரிக் கடை நடத்தி வந்தார். நேற்று காலை 8.30 மணியளவில் ரகு தனது கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையம் அருகே வந்தபோது அந்த வழியாக சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
வாலிபர் பலி
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரகுவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரகு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிவு செய்து ஆத்தூர் அருகே வடமலை கவுண்டனூர் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் சுப்பிரமணியை (22) கைது செய்தார்.
Related Tags :
Next Story