கொலை-கொலைமுயற்சி வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கொலை-கொலைமுயற்சி வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 5 Sep 2021 3:11 PM GMT (Updated: 5 Sep 2021 3:11 PM GMT)

2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி வழக்கில் கைதான 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கொலை முயற்சி
குரும்பூர் அருகே உள்ள மயிலோடையை சேர்ந்தவர் காலபெருமாள். இவருடைய மகன் சுரேஷ்குமார் (வயது 38). இவரை கொலை முயற்சி வழக்கில் குரும்பூர் போலீசார் கைது செய்தனர். 
கொலை வழக்கு
இதே போன்று ஏரல் அருகே உள்ள வாழவல்லானை சேர்ந்த முருகையா மகன் ஆறுமுகராஜ் (46) என்பவர் மூதாட்டியை கொலை செய்து நகை பறித்த வழக்கில் ஏரல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர்கள் தொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து வந்தனர். இதனால் சுரேஷ்குமார், ஆறுமுகராஜ் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். 
குண்டர் சட்டம்
அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சுரேஷ்குமார், ஆறுமுகராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேற்று பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.

Next Story