மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது
நெல்லை:
பாளையங்கோட்டை அகஸ்தியர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் பால வெங்கடேஷ் (வயது 28). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை பாளையங்கோட்டை வாய்க்கால் பாலம் பகுதியில் நிறுத்திவிட்டு சென்றிருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
பால வெங்கடேஷ் இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாதவன் (21), சந்தன குமார் (21) மற்றும் சிறுவன் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை மீட்டனர்.
Related Tags :
Next Story