பெரும்பாலை அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை


பெரும்பாலை அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 12 Sep 2021 4:57 PM GMT (Updated: 12 Sep 2021 5:09 PM GMT)

பெரும்பாலை அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

ஏரியூர்,

பெரும்பாலை அருகே உள்ள எர்ரப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மகன் ரவிச்சந்திரன் (வயது 25). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு வந்த ரவிச்சந்திரன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

வாலிபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story