ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு
x
தினத்தந்தி 14 Sep 2021 6:13 PM GMT (Updated: 14 Sep 2021 6:13 PM GMT)

திருப்பத்தூர் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருடப்பட்டது.

தேவகோட்டை,

திருப்பத்தூர் அருகே உள்ள திருகாளப்பட்டி கீழாநிலை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி சிவசங்கரி (வயது34) இவர் சம்பவத்தன்று தேவகோட்டையில் நடைபெற இருந்த திருமணத்திற்கு தனது 2½ வயது குழந்தை தர்ஷன் தர்ஷித்தை அழைத்துக்கொண்டு திருப்பத்தூரில் இருந்து பஸ்சில் தேவகோட்டைக்கு வந்தார். பையில் 5 பவுன் நகை வைத்திருந்தார்.தேவகோட்டையில் பஸ்சை விட்டு இறங்கி உறவினர் வீட்டிற்குச் சென்று பார்த்த போது பையில் வைத்திருந்த நகைப்பெட்டி காணவில்லை. பஸ்சில் யாரோ அதை திருடி விட்டனர். இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீஸ் நிலையத்தில் சிவசங்கரி புகார் அளித்தார்.புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story