கட்டிட காண்டிராக்டர் கொலையில் மேலும் ஒருவர் கைது


கட்டிட காண்டிராக்டர் கொலையில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 16 Sep 2021 7:07 PM GMT (Updated: 16 Sep 2021 7:07 PM GMT)

நெல்லை அருகே கட்டிட காண்டிராக்டர் கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:

நெல்லை அருகே உள்ள வடக்கு தாழையூத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 33). கட்டிட காண்டிராக்டரான இவர் கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, இதுவரை 15 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் நாங்குநேரி சவளைக்காரன் குளத்தை சேர்ந்த செந்தூர்பாண்டி (28) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Next Story