வீட்டில் நகை திருடிய ஆட்டோ டிரைவர் கைது


வீட்டில் நகை திருடிய ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 19 Sep 2021 6:58 PM GMT (Updated: 19 Sep 2021 6:58 PM GMT)

பாளையங்கோட்டையில் வீட்டில் நகை திருடிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:
பாளையங்கோட்டையில் வீட்டில் நகை திருடிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

நகை திருட்டு

நெல்லை பாளையங்கோட்டை உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இருதயசாமி. சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த 4½ பவுன் தங்க சங்கிலியை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது தங்க சங்கிலி திருட்டு போன அன்று இருதயசாமி தனது வீட்டிற்கு ஒரு துணி துவைக்கும் எந்திரம் வாங்கி உள்ளார். அதனை வீட்டிற்கு கொண்டு செல்வதற்கு தாழையூத்து சங்கர் நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (வயது 31) என்பவரை வாடகைக்கு அழைத்து உள்ளார். மணிகண்டன், இருதய சாமியின் வீட்டிற்குள் துணி துவைக்கும் எந்திரத்தை இறக்கி வைத்து விட்டு, அங்கு இருந்த தங்க சங்கிலியை திருடி சென்றது தெரியவந்தது. 

கைது

இதையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 4½ பவுன் தங்க சங்கிலியை மீட்டனர்.

Next Story