வாலிபர் தற்கொலை


வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 26 Sep 2021 6:06 PM GMT (Updated: 26 Sep 2021 6:06 PM GMT)

மனைவி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

சிவகாசி, 
சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி சந்தனமாரியம்மன் நகரை சேர்ந்தவர் அய்யனார் (வயது 35). இவருக்கும், ஜெயந்தி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கோகுலகிருஷ்ணன் (10) என்ற மகன் உள்ளான். உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜெயந்தி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்தார். இதை தொடர்ந்து தனது மகனை கவனித்துக்கொள்ள முடியாமல் அய்யனார் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். 
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது அய்யனார் தீக்குளித்தார். பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story