செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்பத்தகராறில் தாய், மகள் தூக்குப்போட்டு தற்கொலை


செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்பத்தகராறில் தாய், மகள் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 Oct 2021 5:56 AM GMT (Updated: 2 Oct 2021 5:56 AM GMT)

மதுராந்தகம் அருகே குடும்பத்தகராறில் தாய், மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தற்கொலை
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 45) இவர் மதுராந்தகத்தில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தாஜ்நிஷா (40). இவரது மகள் சஹானா பானு (18). குடும்பத்தகராறு காரணமாக தாஜ்நிஷா, மகள் சஹானா பானு இருவரும் தூக்குப்போட்டு கொண்டனர். இதையடுத்து அக்கம் பக்கத்தனர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

போலீசார் விசாரணை
இதுகுறித்து தாஜ்நிஷாவின் தாயார் மதுராந்தகம் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story