ரூ.10 லட்சம் நில மோசடியில் 2 பேர் கைது


ரூ.10 லட்சம் நில மோசடியில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2021 5:28 PM GMT (Updated: 20 Oct 2021 5:28 PM GMT)

ரூ.10 லட்சம் நில மோசடியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம், 
மதுரை கீழவெளிவீதி தென்னிந்திய திருச்சபை பொருளாளர் ஜேம்ஸ் என்பவரின் மகன் ராஜன் (வயது47). இந்த திருச்சபைக்கு ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் பாத்தியப்பட்ட 17 சென்ட் இடம் உள்ளது. இந்த நிலத்தில் கடைகள் கட்டி மாத வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிலத்தினை முதுகுளத்தூர் பரமக்குடி மெயின்ரோடு தர்மராஜ் மகன் குருமூர்த்தி என்பவர் போலி ஆவணம் தயாரித்து நிலத்தினை மோசடி செய்துவிட்டாராம். இதற்கு மதுரை பசுமலை சண்முகம் மகன் ஜான் கிதியோன், மதுரை தெற்கு அரசரடி ரெயில்வே காலனி பாண்டி மகன் கல்யாண ராமச்சந்திரன், ஆப்பனூர் ரவி, பரமக்குடி பழனி மகன் ஏனோக் பிலிப் ஆகியோர் உடந்தையாக இருந்தார் களாம். இந்த சொத்தின் மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த ஜேம்ஸ் ராமநாதபுரம் மாவட்ட நிலமோசடி தடுப்பு பிரிவில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பொம்மையாசாமி வழக்குபதிவு செய்து ஜான் கிதியோன், ஏனோக் பிலிப் ஆகியோரை கைது செய்தார். தலைமறைவாக உள்ள குரூமூர்த்தி, கல்யாண ராமச்சந்திரன், ரவி ஆகியோரை தேடிவருகின்றனர்.

Next Story