நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா மூதாட்டி பலி


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா மூதாட்டி பலி
x
தினத்தந்தி 21 Oct 2021 4:23 PM GMT (Updated: 21 Oct 2021 4:23 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா மூதாட்டி பலி

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
45 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 51 ஆயிரத்து 715 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரின் பெயர் பிற மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,712 ஆக குறைந்தது.
இந்த நிலையில் நேற்று மேலும் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 757 ஆக அதிகரித்து உள்ளது.
மூதாட்டி பலி
இதற்கிடையே நேற்று 54 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 50 ஆயிரத்து 659 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 604 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 493 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். எனவே இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 494 ஆக அதிகரித்து உள்ளது.

Next Story