2 ஆசிரியர்களுக்கு சிறை தண்டனை


2 ஆசிரியர்களுக்கு சிறை தண்டனை
x
தினத்தந்தி 21 Oct 2021 5:39 PM GMT (Updated: 21 Oct 2021 5:39 PM GMT)

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவேறு வழக்குகளில் 2 ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டத்தின் சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சிவகங்கை, 
 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவேறு வழக்குகளில் 2 ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டத்தின் சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பாலியல் தொந்தரவு
சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்காலில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு இந்தப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த ரெங்கராஜ்(வயது 36) என்பவர் பள்ளியில் 2-ம் வகுப்பில் படித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அந்த மாணவியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ரெங்கராஜனை கைது செய்தனர். அவர் மீது சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி பாபுலால், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ெரங்கராஜனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.6 லட்சம் வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டார்.
மற்றொரு வழக்கு
 இதேபோல் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த பிரான்மலையில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தவர் சரவணன்(48). இவர் கடந்த 2017-ம் ஆண்டு அந்த பள்ளியில் 7-ம் வகுப்பு படித்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். 
இதுதொடர்பாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
உத்தரவு
வழக்கை விசாரணை செய்த நீதிபதி பாபுலால், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் சரவணனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.2 லட்சம் நிவாரணமாக அரசு வழங்கவும் உத்தரவிட்டார்.

Next Story