கைக்குழந்தையுடன் போராடி காதலனை கரம் பிடித்த இளம்பெண்
விருத்தாசலம் அருகே உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை இளம்பெண் போராடி கரம் பிடித்தார்.
கம்மாபுரம்,
விருத்தாசலம் அருகே உள்ள முதனை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகள் சந்தியா(வயது 26). இவரும், அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் வேல்முருகன் (36) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதில் சந்தியா கர்ப்பமானார்.
இதையடுத்து அவர், வேல்முருகனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினார். ஆனால் அவர் பல்வேறு காரணங்களை கூறி தட்டிக்கழித்து வந்ததாக தெரிகிறது.
திருமணம்
இதனிடையே சந்தியாவிற்கு கடந்த 10-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வேல்முருகனிடம் கூறியுள்ளார். ஆனால் வேல்முருகனின் தாயார், தங்கை, தங்கையின் கணவர் ஆகியோர் சந்தியாவிடம் வரதட்சனை கேட்டுள்ளனர்.
இது குறித்து சந்தியா ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வேல்முருகனை அழைத்து அறிவுரை வழங்கினர். இதையடுத்து வேல்முருகன் சந்தியாவை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து கொளஞ்சியப்பர் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடந்தது. இதில் குழந்தையின் முன்பு அவர்கள் திருமணம் செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story