விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 24 Oct 2021 6:06 PM GMT (Updated: 24 Oct 2021 6:06 PM GMT)

பொம்மிடி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

பொம்மிடி:
பொம்மிடி அருகே உள்ள மணலூரை சேர்ந்தவர் மாது. விவசாயி. இவரது மகன் குமார் (வயது 25). சம்பவத்தன்று மாது ஆடு ஏன் மேய்க்கவில்லை என மகனை கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த குமார் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story