பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 12 Nov 2021 6:00 PM GMT (Updated: 12 Nov 2021 6:00 PM GMT)

வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

வாணியம்பாடி

வாணியம்பாடியை அடுத்த ஆவாரங்குப்பம் பள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் வாசு (வயது 22). இவர் ராமநாயக்கன்பேட்டை பகுதியில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அதே பகுதியில் 12-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவியை கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளார். 

இதை அறிந்த கடை உரிமையாளர் வாசுவை வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். பின்னர் வாசு கோவையில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்துள்ளார். 

இந்த நிலையில் மாணவியை ஆசை வார்த்தை கூறி கடந்த மாதம் 15-ந் தேதி கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து அம்பலூர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வாசு கோவையில் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து வாசுவை போலீசார் அழைத்து வந்து ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்தனர். மாணவியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Next Story