ரேஷன் அரிசி கடத்தியவருக்கு 2 ஆண்டு சிறை


ரேஷன் அரிசி கடத்தியவருக்கு 2 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 18 Nov 2021 7:09 PM GMT (Updated: 18 Nov 2021 7:09 PM GMT)

ரேஷன் அரிசி கடத்தியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து விருதுநகர் கோர்ட்டு உத்தரவிட்டது.

விருதுநகர், 
ரேஷன் அரிசி கடத்தியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து விருதுநகர் கோர்ட்டு உத்தரவிட்டது. 
ரேஷன் அரிசி 
விருதுநகர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 25.12.2007 அன்று அருப்புக்கோட்டை- தூத்துக்குடி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
 அதில் 50 கிலோ எடை கொண்ட 240 ரேஷன் அரிசி மூடைகள் இருந்தன. இது தொடர்பாக அருப்புக்கோட்டையை சேர்ந்த சங்கர் ராஜ் என்பவரை கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
2 ஆண்டு சிறை
 இந்த வழக்கை விசாரித்த விருதுநகர் முதல் மாஜிஸ்டிரேட் மருதுபாண்டி குற்றம் சாட்டப்பட்ட சங்கர்ராஜுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Related Tags :
Next Story