மனநலம் பாதித்த பெண் தீக்குளித்து தற்கொலை


மனநலம் பாதித்த பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 21 Nov 2021 6:17 PM GMT (Updated: 21 Nov 2021 6:17 PM GMT)

ஜெயங்கொண்டம் அருகே மனநலம் பாதித்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஜெயங்கொண்டம்,
மனநலம் பாதித்த பெண்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே  கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பரஞ்சோதி. இவரது மனைவி தமயந்தி (வயது 50). இவர்களுடைய மகன் அமர்த கணேஷ் (23). இவர்கள் செங்குந்தபுரம் கிராமம் மெயின் ரோட்டு தெருவில் வசித்து வருகின்றனர்.
தமயந்தி கடந்த 22 ஆண்டுகளாக மனநிலை பாதித்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று காலை 7 மணியளவில் தமயந்தி தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
உடல் கருகி பலி
இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் தமயந்தி உடல் முழுவதும் கருகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story