தேன்கனிக்கோட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


தேன்கனிக்கோட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 25 Nov 2021 4:57 AM GMT (Updated: 25 Nov 2021 4:57 AM GMT)

தேன்கனிக்கோட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அடுத்த கோட்டப்பாலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா(வயது 42). கூலித்தொழிலாளி. இவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதை அவருடைய மனைவி மங்கம்மா கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கிருஷ்ணப்பா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story