கோவிலில் பொருட்கள் திருட்டு


கோவிலில் பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 26 Nov 2021 8:06 PM GMT (Updated: 26 Nov 2021 8:06 PM GMT)

கோவிலில் பொருட்கள் திருட்டு போனது.

ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் கிராமத்தில் நேற்று முன்தினம் அங்குள்ள விஸ்வநாதர் கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்ட பூசாரி அதிர்ச்சி அடைந்து, செயல் அலுவலர் முரளிதரனுக்கு தகவல் கொடுத்தார். அவர் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு போலீசார் வந்து பார்த்தபோது, 5 குத்து விளக்குகள், 2 தீபாராதனை தட்டுகள், 3 மணிகள் என 80 கிலோ பித்தளை பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story