நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53,451 ஆக அதிகரிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53,451 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 29 Nov 2021 7:22 PM GMT (Updated: 29 Nov 2021 7:22 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53,451 ஆக அதிகரிப்பு

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 44 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 53,451 ஆக அதிகரித்து உள்ளது.
44 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 53,404 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 53,407 ஆக அதிகரித்தது. இதற்கிடையே நேற்று புதிதாக மேலும் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 451 ஆக அதிகரித்து உள்ளது.
52,478 பேர் குணமடைந்தனர்
இந்த நிலையில் நேற்று 31 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இம்மாவட்டத்தில் இதுவரை 52,478 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 506 பேர் இறந்து விட்ட நிலையில் மீதமுள்ள 467 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story