ஓடும் பஸ்சில் நகை மாயம்


ஓடும் பஸ்சில் நகை மாயம்
x
தினத்தந்தி 29 Nov 2021 7:31 PM GMT (Updated: 29 Nov 2021 7:31 PM GMT)

அருப்புக்கோட்டையில் ஓடும் பஸ்சில் பெண் வைத்திருந்த நகை மாயமானது.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டி ராஜீவ்நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகர். இவருடைய மனைவி ருக்மணி (வயது 55). இந்நிலையில் ருக்மணி ராஜீவ்நகரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு அரசு டவுன் பஸ்சில் வந்துள்ளார். பஸ்சின் இருக்கையில் ஏறி அமர்ந்ததும் ருக்மணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை கழண்டு விழுவது போல் இருந்ததால் நகையை கழட்டி பர்சுக்குள் வைக்கமுயன்றுள்ளார். அப்போது அருகில் இருந்த பெண் ஒருவர் ருக்மணிக்கு உதவுவதாக கூறி நகையை வாங்கி பர்சுக்குள் வைத்து பர்சை ருக்மணியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிவன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இறங்கி ருக்மணி பர்சை திறந்து பார்த்தபோது பர்சில் வைத்த நகை காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ருக்மணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story