ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Nov 2021 8:07 PM GMT (Updated: 30 Nov 2021 8:07 PM GMT)

விருதுநகரில் அனைத்து சுகாதார ஆய்வாளர் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர், 
விருதுநகர் சுகாதாரத்துறை துணைஇயக்குனர் அலுவலகம் முன்பு அனைத்து சுகாதார ஆய்வாளர் கூட்டமைப்பின் சார்பில் பொது சுகாதாரத்துறை அலுவலக மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1646 தற்காலிக சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேச சென்ற மாநில நிர்வாகிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும்,  அவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும், 1,646 தற்காலிக சுகாதாரஆய்வாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story