சிறுமியை கற்பழித்த வாலிபர் போக்சோவில் கைது
சிறுமியை கற்பழித்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஆலங்குடி,
கறம்பக்குடி தென்னகர் சிவன் கோவில் வீதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 24). இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்து உள்ளார். இதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்து உள்ளார். இந்தநிலையில், அந்த சிறுமியை தஞ்சாவூருக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற சந்தோஷ் அவரை கற்பழித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா போக்சோ சட்டத்தில் சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்தார்.
Related Tags :
Next Story