முன்னாள் அரசு ஊழியருக்கு 2 ஆண்டு சிறை


முன்னாள் அரசு ஊழியருக்கு 2 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 30 Dec 2021 9:23 PM GMT (Updated: 30 Dec 2021 9:23 PM GMT)

லஞ்சம் வாங்கிய முன்னாள் அரசு ஊழியருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
அருப்புக்கோட்டையில் கடந்த 2010-ம் ஆண்டு சமூக நலத்துறையில் வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றியவர் மீனம்மாள் (வயது 54). இவர் பன்னீர் செல்வம் என்பவரிடம் மகளின் திருமண உதவி தொகை வழங்க ரூ.1000 லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நீதிபதி கஜரா ஜீஜி, குற்றம் சாட்டப்பட்ட மீனம்மாளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.


Related Tags :
Next Story