கோவிலில் நகை திருட்டு


கோவிலில் நகை திருட்டு
x
தினத்தந்தி 13 Jan 2022 3:35 PM GMT (Updated: 13 Jan 2022 3:35 PM GMT)

கோவிலில் நகை திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாயில்பட்டி, 
தாயில்பட்டி அருகே உள்ள பேர்நாயக்கன்பட்டி கிராமத்தில் சந்தான கிருஷ்ணன் கோவிலில் நேற்று வழக்கம்போல் கோவில் வழிபாட்டிற்கு அர்ச்சகர் ராமானுஜம் (வயது 70) சென்றபோது கருவறை திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து பார்த்தபோது கருவறையில் இருந்த வெள்ளி காப்பு 300 கிராம், 400 கிராம் எடை உள்ள கிரீடம் மற்றும் சாமி கழுத்தில் இருந்த 4 கிராம் மாங்கல்யம் திருட்டுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story