குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர்:
அரியலூர் அண்ணா நகரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த ஒரு வாரமாக இந்த பகுதியில் குடிநீர் வினியோகம் சரியாக செய்யப்படவில்லை. பொங்கல் பண்டிகை வருவதால் வீடுகளை சுத்தம் செய்வதற்கும், வெள்ளை அடிப்பதற்கும் வழக்கத்தைவிட அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் தண்ணீர் வரவே இல்லை என்று கூறி அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மோட்டார் சரி செய்யப்பட்டு உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story