ஆட்டோவில் பேட்டரி திருட முயன்ற வாலிபர் கைது
ஆட்டோவில் பேட்டரி திருட முயன்ற வாலிபர் கைது
நெல்லை:
நெல்லை தச்சநல்லூர் மேல ஊருடையார்புரத்தைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது 43). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவில் தனது ஆட்டோவை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர் நள்ளிரவில் அந்த ஆட்டோவின் பேட்டரியை நைசாக திருட முயன்றார். அப்போது அங்கு வந்த பிரசாத் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில், அவர் மேலப்பாளையம் காயிதேமில்லத் தெருவைச் சேர்ந்த அஜ்மல் கான் (26) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story