தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 17 Jan 2022 8:52 PM GMT (Updated: 17 Jan 2022 8:52 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

எரியாத தெருவிளக்கு
மதுரை மாவட்டம் செல்லூர் கீழகைலாசபுரம் 7-வது வார்டு பகுதியில் தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பெண்களும், சிறுவர், சிறுமியர்களும் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் சமூகவிரோதிகள் திருட்டு, வழிப்பறி போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். எனவே, இங்குள்ள எரியாத தெருவிளக்கை சரிசெய்ய வேண்டும்.
சந்தனகுமார், கீழகைலாசபுரம். 
நாய்கள் தொல்லை
மதுரை மாவட்டம் பொன்மேனி பிரதான சாலையை சுற்றியுள்ள தெருக்களில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்களால் பெண்கள் முதல் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் என அனைவரும் அச்சத்தில் உள்ளனர். வாகன ஓட்டிகளின் வாகனங்களின் மீது நாய்கள் மோதுவதால் விபத்துகளும் நடக்கிறது. அதிகாரிகள் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விக்டர், மதுரை.
உடைந்த கழிவுநீர் குழாய் 
மதுரை மாவட்டம் எல்லீஸ்நகர் வடக்கு பள்ளிவாசல் பஸ் நிறுத்தம் அருகில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் செல்லும் கழிவுநீர் குழாய் உடைந்து காணப்படுகிறது. கழிவுநீர் சாலையில் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
யோகநாதன், மதுரை. 

Next Story