மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று


மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 18 Jan 2022 9:07 PM GMT (Updated: 18 Jan 2022 9:07 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 15 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 12 ஆயிரத்து 204 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 247 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பெரம்பலூர் ஒன்றியத்தில் 41 பேர், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 12 பேர், ஆலத்தூர் ஒன்றியத்தில் 7 பேர், வேப்பூர் ஒன்றியத்தில் 9 பேர் என மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது நேற்றைய பரிசோதனை முடிவின்படி கண்டறியப்பட்டது.
தற்போது மொத்தம் 564 பேர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் உள்ளனர். இவர்களில் 468 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 96 பேர் சென்னை, திருச்சி, சேலம், அரியலூர் மற்றும் பெரம்பலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story