நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 359 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 57 ஆயிரத்தை தாண்டியது மூதாட்டி பலி


நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 359 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 57 ஆயிரத்தை தாண்டியது மூதாட்டி பலி
x
தினத்தந்தி 19 Jan 2022 5:45 PM GMT (Updated: 19 Jan 2022 5:45 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிதாக 359 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 57 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிதாக 359 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 57 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
359 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 56 ஆயிரத்து 698 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 56 ஆயிரத்து 699 ஆக அதிகரித்தது.
இதற்கிடையே நேற்று ஒரே நாளில் புதிதாக 359 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே இதுவரை இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 58 ஆக அதிகரித்து உள்ளது.
மூதாட்டி சாவு
இதற்கிடையே நேற்று மாவட்டத்தில் 139 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 54 ஆயிரத்து 692 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 1,843 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு 522 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திருச்செங்கோட்டை சேர்ந்த 91 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். எனவே இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்து உள்ளது.

Next Story