திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.1¾ லட்சம் திருட்டு
திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.1¾ லட்சம் திருட்டு
தொட்டியம், ஜன.20-
தொட்டியம் பண்டார தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது48). லாரி டிரைவர். இவரது மனைவி தேவி. இவர் அப்பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை சண்முகம் அவரது மனைவியை வேலைக்கு விட்டு விட்டு தனது இருசக்கர வாகனத்தில் தோளூர்பட்டியிலுள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்றார். பின்னர் மீண்டும் மதியம் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.1லட்சத்து 70 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சண்முகம் தொட்டியம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை தேடிவருகின்றனர்.
தொட்டியம் பண்டார தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது48). லாரி டிரைவர். இவரது மனைவி தேவி. இவர் அப்பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை சண்முகம் அவரது மனைவியை வேலைக்கு விட்டு விட்டு தனது இருசக்கர வாகனத்தில் தோளூர்பட்டியிலுள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்றார். பின்னர் மீண்டும் மதியம் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.1லட்சத்து 70 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சண்முகம் தொட்டியம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story