ரெயில்வே தண்டவாளம் அருகே வாலிபர் பிணம்
ரெயில்வே தண்டவாளம் அருகே வாலிபர் பிணம்
மணப்பாறை, ஜன.20-
மணப்பாறை நாளங்காடி பின்புறம் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் கரூர் மாவட்டம், பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 20) என தெரியவந்தது. பின்னர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த வாலிபர் ஒரு குற்றவழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். அதன் பின்னர் மணப்பாறை பஸ் நிலையத்திலேயே இருந்த அவர் ஏன் ரெயில்வே தண்டவாளத்திற்கு சென்றார்? ரெயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறை நாளங்காடி பின்புறம் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் கரூர் மாவட்டம், பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 20) என தெரியவந்தது. பின்னர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த வாலிபர் ஒரு குற்றவழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். அதன் பின்னர் மணப்பாறை பஸ் நிலையத்திலேயே இருந்த அவர் ஏன் ரெயில்வே தண்டவாளத்திற்கு சென்றார்? ரெயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story