தாளவாடி அருகே கர்நாடகா மது பதுக்கியவர் கைது
தாளவாடி அருகே கர்நாடகா மது பதுக்கியவர் கைது செய்யப்பட்டாா்.
தாளவாடி அருகே உள்ள தலமலை கிராமத்தில் கர்நாடகா மது விற்பணை செய்வதாக ஆசனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது மஞ்சுநாதன் (வயது 58) என்பவர், கர்நாடகாவில் இருந்து மது பாக்கெட் வாங்கி வீட்டில் பதுக்கிவைத்து விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவரது வீட்டை சோதனை செய்ததில் 48 கர்நாடகா மது பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மஞ்சுநாதனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 48 மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story