தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 20 Jan 2022 6:53 PM GMT (Updated: 20 Jan 2022 6:53 PM GMT)

கல்லிடைக்குறிச்சியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அம்பை:
கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் நடு தெருவைச் சேர்ந்தவர் சுடலை (வயது 46). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பிரியா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரியா கணவரை விட்டு பிரிந்து மகன்களுடன் பெற்றோரின் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த சுடலை, அங்குள்ள காட்டுப்பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story