திருச்சி விமான நிலைய இயக்குனருக்கு கொரோனா


திருச்சி விமான நிலைய இயக்குனருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 Jan 2022 8:32 PM GMT (Updated: 20 Jan 2022 8:32 PM GMT)

திருச்சி விமான நிலைய இயக்குனருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

செம்பட்டு:
திருச்சி விமான நிலையத்தில் இயக்குனராக பணியாற்றி வருபவர் தர்மராஜ் (வயது 53). இவருக்கு காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Next Story