மண் அள்ளியவர் கைது


மண் அள்ளியவர் கைது
x
தினத்தந்தி 22 Jan 2022 4:55 PM GMT (Updated: 22 Jan 2022 4:55 PM GMT)

மண் அள்ளியவர் கைது

சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள மாரனேரி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட துரைச்சாமிபுரத்தில் உரிய அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜூக்கு தகவல் கிடைத்தது, அதன் பேரில் அவர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு மண் அள்ளிக்கொண்டு இருந்த கனகராஜ் (வயது 30) என்பவரை கைது செய்தனர். மணல் அள்ளும் எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக வீரமணி, முத்துப்பாண்டி, பாண்டி, பட்டிராஜா, சுவாமிதாஸ் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story