கோவில், கடையில் திருடிய 3 பேர் கைது


கோவில், கடையில் திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2022 8:32 PM GMT (Updated: 24 Jan 2022 8:32 PM GMT)

திருப்பரங்குன்றம் அருகே கோவில், வீடு, கடைகளில் தொடர் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பரங்குன்றம், 

திருப்பரங்குன்றம் அருகே கோவில், வீடு, கடைகளில் தொடர் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பூட்டிய கடை உடைப்பு

திருப்பரங்குன்றம் அருகே ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகம் கப்பலூர் கண்ணன் காலனி பகுதியில் நேற்று முன்தினம் முழு ஊரடங்கினையொட்டி அனைத்து வீதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் ஒரு கடையின் பூட்டை உடைத்து 3 பேர் கொள்ளையடிக்க முயன்றதாக தெரிகிறது.அதை கண்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.இந்த நிலையில் 2 பேர் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர். ஒருவர் மட்டும் ஓடி தப்பிக்க முயன்ற போது அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து ஆஸ்டின்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.

3 பேர் கைது

இதையடுத்து போலீசார் பிடிப்பட்டவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் தப்பி சென்றவர்கள் பதுங்கிய இடம் அறிந்து அவர்களையும் பிடித்து மேல் விசாரணை செய்தனர். அதில் திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரி மொட்டமலை சிவா (வயது 19), சேகர் (19) மற்றும் 14 வயது சிறுவன் என்று தெரிய வந்தது.
இவர்கள் கடந்த 6-ந்தேதி தனக்கன்குளம் திருவள்ளுவர் நகர் பஸ் நிறுத்தத்தில் உள்ள ஜெயசேகர் வீட்டில் தங்க நகை மற்றும் ரூ.20 ஆயிரமும், தோப்பூரில் முத்துமாரியம்மன் கோவிலில் பித்தளை பொங்கல் பானைகள், வேல்கள் திருடியதும் விசாரணையில் தெரியவந்தது.இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து திருடிய நகை, பணம் மற்றும் பித்தளைப்பொருட்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Next Story