பள்ளி மாணவியை கடத்திச்சென்ற வாலிபர் போக்சோவில் கைது
பள்ளி மாணவியை கடத்திச்சென்ற வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய மாணவி ஒருவர் காணாமல் போய் விட்டதாக, அவருடைய தாய் கடந்த 25-ந்தேதி பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த மாணவியை திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா கொளக்குடியை சேர்ந்த சின்னதம்பியின் மகன் சதீஷ்குமார்(வயது 21) ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது விசாரணையில் தெரிய வந்ததாக ேபாலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று சதீஷ்குமாரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவியை மீட்ட போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story